×

புளிச்சங்காடு கைகாட்டியில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

 

புதுக்கோட்டை, மே 20: பெட்ரோல், டீசல் விலை உயர்வு, நீட் தேர்வு குளறுபடிகளை கண்டித்து ஆலங்குடி அருகேயுள்ள புளிச்சங்காடு கைகாட்டியில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள புளிச்சங்காடு கைகாட்டி பேருந்து நிறுத்தம் அருகே அக்கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவர் எஸ்.மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், நீட் தேர்வில் குளறுபடிகளை ஏற்படுத்திய மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.
இதில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராம.சுப்புராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : government ,Pulichangad Kaikatti ,Pudukkottai ,Congress ,Alangudi ,
× RELATED அரசு குடியிருப்பில் 10 கிலோ பதுக்கல்;...