×

நீர்வரத்து சீரானதை தொடர்ந்து கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் ‘குஷி’

 

தேனி, மே 19: கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து சீராக வருவதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி உள்ளது. கடந்த 30 நாட்களாக கும்பக்கரை அருவியில் நீர்வரத்து முற்றிலும் இல்லாத நிலையில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்ல வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வெள்ளகெவி, வட்டக்கானல், பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழையால் அருவிக்கு நீர்வரத்து துவங்கியுள்ளது. எனவே கும்பக்கரை அருவிக்கு சீரான நீர்வரத்து துவங்கியதை தொடர்ந்து, வனத்துறையானது, சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவிக்கு செல்லவும், அருவியில் குளிக்கவும் அனுமதி அளித்துள்ளது.

Tags : Kumbhkarai ,Theni ,Forest Department ,Periyakulam ,
× RELATED அரசு குடியிருப்பில் 10 கிலோ பதுக்கல்;...