டெல்லி: ஆம் ஆத்மி கட்சி முன்னாள் எம்எல்ஏ தீபக் சிங்லாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. வங்கி கடன் மோசடியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பணமோசடி தொடர்பாக டெல்லி, கோவாவில் தீபக் சிங்லா தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளனர்.
