அரவக்குறிச்சி, மே 18: அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் காலை முதலே கடுமையாக வெயில் சுட்டெரித்தது.
இந்த நிலையில், மாலை நேரத்தில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென வானம் கருமேகங்களால் சூழ்ந்து காற்றுடன் கூடிய மிதமான சாரல் மழை பெய்தது. அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பள்ளப்பட்டி, மலைக்கோவிலூர், ராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாரல் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
