போடி, மே 17: போடி பகுதியில் இலவம் காய்கள் அமோக விளைச்சல் கண்டிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அ டைந்துள்ளனர். போடி நகர் மற்றும் சுற்றியுள்ள கொட்டகுடி, குரங்கணி, முட்டம், மேல் முட்டம், காரிப்பட்டி, அடகுபாறை, கொம்பு தூக்கி அய்யனார் கோயில் பரவு, பீச்சாங்கரை, முந்தல் பரமசிவன் கோயில் மலை அடிவாரப்பகுதிகள், கரட்டுப்பட்டி வடக்கு மலை, அத்தியூத்து, உத்தாம்பாறை, சிறைக்காடு, மல்லிப்பட்டி, உலக்குரட்டி, வடமலை நாச்சியம்மன் கோயில்பகுதி, அகமலை சாலை என பல்வேறு பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் இலவம் மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஒரு ஏக்கருக்கு 400க்கும் மேற்பட்ட மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
