ஜெருசலேம்: காசாவில் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலில் ஹமாசின் ராணுவ பிரிவு தலைவரான இஸ் அல் தீன் அல் ஹத்தாத் கொல்லப்பட்டார். கடந்த 2023, அக்டோபர் 7 ம் தேதி ஹமாஸ் படையினர் இஸ்ரேலுக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. கடந்த அக்டோபரில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், காசாவில் நேற்றுமுன்தினம் நடந்த ஏவுகணை தாக்குதலில் ஹமாஸ் தளபதி இஸ் அல் தீன் அல் ஹத்தாத் கொல்லப்பட்டார். இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023 அக்டோபர் 7 படுகொலையின் சூத்திரதாரிகளில் ஒருவரான ஹமாஸ் தளபதியை கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளது.
