திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் ஆசியாவின் மிகப்பெரிய அலையாத்திக்காடு உள்ளது. இந்த நிலையில் வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியதால் இப்பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்த நிலையில், இன்று மழை விட்டு வெயில் காணப்படுவதால் படகு மூலம் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது என முத்துப்பேட்டை வனசரக அலுவலர் சதீஷ் கண்ணன் கூறினார்.
