×

குரும்பூண்டி ஊராட்சியில் சின்னகுளத்தை தூர்வாரி படித்துறை கட்ட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

கந்தர்வகோட்டை, மே.16: குரும்பூண்டி ஊராட்சி சின்னகுளத்தை தூர்வாரி படித்துறை கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் குரும்பூண்டி ஊராட்சியில் இரண்டு ஆயிரம் மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு அரசு நியாயவிலை கடை, வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், அரசு பள்ளிகள் உள்ளன. ஊரின் மைய பகுதியில் சின்னகுளம் அமைந்து உள்ளது.

இந்த குளத்தில் மக்கள் குளித்தும் துணி துவைத்தும் வருகிறார்கள். தற்சமயம் இந்த குளத்திற்கு நீர் வரும் பாதை முறையாக பராமரிக்கப்பட வில்லை எனவும் இதனை சீர்செய்து வரத்து வாரி, வடிகால் ஆகியவற்றை புனரமைத்து மக்கள் குளிக்கும் படிதுறைகளை முறையாக கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என இப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கின்றனர்.

 

Tags : Kurumpundi panchayat ,Kurumpundi ,Kandarvakottai ,Pudukkottai district ,
× RELATED அரசு குடியிருப்பில் 10 கிலோ பதுக்கல்;...