×

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் ஆளுநர் அர்லேகர் சென்னை வருகை

 

சென்னை: தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் திருவனந்தபுரத்திலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு நேற்று இரவு வந்தார். தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நேற்று இரவு 10.30 மணிக்கு, இண்டிகோ ஏர்லைன்ஸ் மூலம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை பழைய விமான நிலையம் வந்தார். இன்று மாலை வரையில், சென்னை கிண்டி மக்கள் பவனில் இருக்கிறார். அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கிண்டி மக்கள் பவன் சென்று அவரை சந்தித்து பேச இருப்பதாகவும், அப்போது கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்படும் அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைப்பார் என்றும் கூறப்படுகிறது.

மேலும், முதலமைச்சர் ஜோசப் விஜய்யும் அர்லேகரை சந்தித்து பேச உள்ளார். அப்போது, தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது. பின்னர், இன்று இரவு விமானத்தில, சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்கிறார் என்றும் கூறப்படுகிறது. அதிமுக எம்எல்ஏக்கள் விவகாரம், அமைச்சரவை விரிவாக்கம் என்ற பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் அர்லேகர் சென்னை வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Governor Arlekar ,Chennai ,Tamil ,Thiruvananthapuram ,Governor ,Rajendra Vishwanath Arlekar ,IndiGo Airlines ,
× RELATED கோடை மழையால் புல்லாவெளி அருவியில்...