×

தஞ்சாவூர் சுவாமிமலை அருகே வெடித்து சிதறிய பட்டாசு ஆலை

தஞ்சாவூர்: சுவாமிமலை அருகே மணப்படையூர் கிராமத்தில் ஜேசுதாஸ் மற்றும் மேரிசெல்வராணி என்பவருக்கு சொந்தமான நாட்டுவெடி தயாரிக்கும் கூடம் அமைந்துள்ளது. இங்கு பண்டிகை காலங்களில் நாட்டு வெடிகள் மற்றும் வான மத்தாப்புகள் ஆகியவை தயார் செய்யப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டம் முழுவதும் திருவிழா காலம் என்பதால் அதிக அளவிலான வெடிகள் தயாரிக்கபட்டு சேமிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் சேமிக்கப்பட்டிருந்த சுமார் 1000 டன் அளவிலான வெடிகள் வெடித்து சிதறியது. இதனால் கட்டிடம் முழுவதும் தரைமட்டமானது. காலை நேரம் என்பதால் ஊழியர்கள் யாரும் இல்லாமல் இருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தகவலை அறிந்து வந்த சுவாமிமலை காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், அங்கு வெடிகள் இருப்பதால் இன்னும் வெடிகள் வெடித்து கொண்டு இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர். ஏற்கனவே இதே பகுதியில் கடந்த 1 வாரத்திற்கு முன்பு வெடி விபத்து ஏற்பட்டு மற்றொரு கட்டிடம் சேதமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Swamimalai ,Thanjavur ,Yesudas ,Maryselvarani ,Manapadhiyur ,
× RELATED மே 25 முதல் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப...