×

சட்டவிரோத வாக்கு – வெளிநாட்டினர் 10 பேர் கைது

 

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்த வெளிநாடு வாழ் தமிழர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டமன்றத் தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்தது தொடர்பாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தலில் வாக்களித்துவிட்டு வெளிநாடு திரும்பும்போது சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டனர். இந்திய குடிமகனாக இல்லாமல் சட்டவிரோதமாக தேர்தலில் வாக்களித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த ரஞ்சனி, சர்புதீன், நிலந்தி, ஜெயந்தன், சார்லி பாலச்சந்திரன், சக்ரவர்த்தி லோகப்பிரியா, இந்தோனேஷியாவைச் சேர்ந்த மரியாட்டி, கனடாவைச் சேர்ந்த ஜிதேந்திரநாத் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையைச் சேர்ந்த சுனிதா சக்ரவர்த்தி, பிரிட்டனைச் சேர்ந்த அய்யாதுரை ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்

 

Tags : Chennai ,Tamil Nadu Assembly elections ,Assembly ,
× RELATED சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கத்தில்...