×

எடப்பாடி – எஸ்.பி.வேலுமணி இடையே முற்றிய மோதல்: அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு!

 

சென்னை: அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்பட 26 அதிமுக மாவட்ட செயலாளர்கள் நீக்கப்பட்டனர். அதிமுக உட்கட்சி மோதலால் பல மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர்களின் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பதற்றம் காரணமாக சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிமுக அலுவலக வாயிலில் தடுப்பு அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் அசாதாரணக் கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கவும், அசம்பாவிதங்களைத் தடுக்கவும் தற்காலிகச் சோதனைச் சாவடிகளை அமைத்து, சிறப்புப் பாதுகாப்புக் குழுக்கள் கண்காணித்து வருகின்றன. அதிமுக அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

Tags : Edappadi ,S. B. ,Velumani ,Chennai ,Raippettai ,Adamugam ,S. B. Velumani ,C. ,V. ,Adimuga ,Sanmugham ,
× RELATED அரசு ஊழியர்கள் மற்றும்...