- வேதாரண்யம்
- காருப்பம்புளம்
- நெய்விலக்கு
- Athanur
- தேத்தக்குடி
- புஷ்பவனம்
- பெரியகுத்தகை
- கதாரிப்புலம்
- குறவப்புலம்
- வேதாரண்யம் தாலுகா
வேதாரண்யம், மே 14: வேதாரண்யம் தாலுகாவில் கருப்பம்புலம், நெய்விளக்கு, ஆதனூர், தேத்தாக்குடி, புஷ்பவனம், பெரியகுத்தகை, கத்தரிப்புலம், குரவப்புலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நீர்சத்து நிறைந்த வாட்டர் ஆப்பிள் சாகுபடி நடைபெறுகிறது. கோடை காலத்தில் தாகத்தை தவிப்பதற்கு பொதுமக்கள் இளநீர், பனை, நூங்கு, எலுமிச்சை பழம் போன்ற இயற்கை கிடைக்கும் பழ வகைகளை பயன்படுத்தி தாகத்தை தீர்க்கின்றனர். மேலும் குளிர்பானங்கள் சர்பத் மோர் போன்றவற்றையும் பொதுமக்கள் தாகத்தை தீர்ப்பதற்கு அருந்துகின்றனர்.
இந்த நிலையில் வேதாரண்யம் பகுதியில் நீர் சேர்த்து நிறைந்த வாட்டர் ஆப்பிள் தற்போது கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. விவசாயிகள் இதனை விளைவித்து கிலோ ரூ.50க்கு வியாபாரிகளிடம் விற்கின்றனர். வியாபாரிகள் இந்த வாட்டர் ஆப்பிளை ரூ.60 முதல் 70 வரை விற்பனை செய்கின்றனர். முந்திரி பழம் போல் தோற்றம் உள்ள இந்த வாட்டர் ஆப்பிள் இயற்கையாக வீட்டு தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இந்த வாட்டர் ஆப்பிள் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை தருகிறது. இதனால் எப்போது விவசாயிகள் ஆர்வத்துடன் வாட்டர் ஆப்பிளை சாகுபடி செய்து வருகின்றனர்.
