திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அடுத்த குறுக்குத்தி போலீஸ் செக்போஸ்ட் அருகே இன்று அதிகாலை லாரி ஒன்று சாலை மைய தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்து லாரியை அப்புறப்படுத்த காவலர் ரவிச்சந்திரன் என்பவர் பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் காவலர் மீதும் லாரி டிரைவர் மீதும் மோதி லாரியில் மோதியது. இதில் காவலர் ரவிச்சந்திரன் லாரி டிரைவர்,காரில் பயணம் செய்த பெண் உட்பட 4 பேர் என மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர்.
