சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2% அகவிலைப்படியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 58%-ஆக உள்ள அகவிலைப்படியை 60% ஆக உயர்த்தி வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1ம் தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படும் . அகவிலைப்படி உயர்வால் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயனடைவர். அகவிலைப்படி உயர்வால் ஆண்டுக்கு ஒன்றுக்கு அரசுக்கு ரூ.1,230 கோடி கூடுதல் செலவு ஏற்படும்
