கூடலூர், மே 13: கூடலூர் புதிய பேருந்து நிலைய பகுதியை சுத்தமாக வைத்திருக்கவும், குப்பைகளை பயணிகள் கண்ட இடத்தில் வீசாமல் இருக்கவும் புதிதாக குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டது. கூடலூர் ஆர்டிஓ குணசேகரன், நகராட்சி ஆணையர் ரவிசங்கர், டிஎஸ்பி வசந்தகுமார், அரசு போக்குவரத்து கிளை மேலாளர் தங்கராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
பேருந்து நிலையத்திற்கு பேருந்துகளில் வந்து இறங்கும் பயணிகள் மற்றும் பேருந்துகளில் ஏறுவதற்காக வருபவர்கள் தங்களிடம் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை ஆங்காங்கே விட்டுச்செல்வதால் பேருந்து நிலையத்தின் தூய்மை பாதிக்கப்படுகிறது.
இதனை தவிர்க்கும் வகையில் குப்பைத்தொட்டிகளிலேயே குப்பைகளை போடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சேகரமாகும் குப்பைகள் நகராட்சி தூய்மை பணியாளர்களால் தினசரி அகற்றப்பட்டு தூய்மை செய்யப்படும். கூடலூர் நகருக்கு உட்பட்ட பகுதிகளில் மேலும் இத்திட்டம் விரிவு படுத்தப்படும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
