×

கோடையை முன்னிட்டு எலுமிச்சை விலை உயர்வு ஒரு பழம் ரூ.15க்கு விற்பனை

புதுக்கோட்டை, மே 13: புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் கோடை வெயில் தாக்கத்தால் தாகத்தை தணிக்கவும் , ஜூஸ் போடுவதற்கு பயன்படுத்தும் எலுமிச்சம் பழம் வரலாறு காணாத அளவில் கிலோ ரூபாய் 300-க்கு விற்பனைபடுகிறது. தற்போது கோடை காலம் என்பதால் எலுமிச்சம் பழத்திற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் புதுக்கோட்டை பகுதியில் விளையும் எலுமிச்சம் பழம் தற்போது கிலோ ரூ.240 முதல் 300 வரை விற்பனை ஆகிறது.

இப்பகுதியில் குறைந்த அளவே தற்போது எலுமிச்சம்பழம் காய்ப்பதால் வெளியூர்களில் இருந்து எலுமிச்சம் பழம் கடைகளுக்கு விற்பனைக்கு வருகிறது. இருந்த போதிலும் குறைந்த அளவே எலுமிச்சம்பழம் வருவதாலும்,கோடை காலம் என்பதாலும் வரலாறு காணாத அளவு ஒரு எலுமிச்சம்பழம் ரூபாய் 15 க்கும், கிலோ ரூபாய் 300க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நல்ல விலை இருந்தும் எலுமிச்சம் பழம் குறைந்த அளவே காய்ப்பதால் விவசாயிகளுக்கு குறைந்த அளவே லாபமே கிடைத்து வருகிறது என விவசாயிகள் தெரிவித்தனர்.

 

 

Tags : Pudukkottai ,
× RELATED அரசு குடியிருப்பில் 10 கிலோ பதுக்கல்;...