கரூர், மே 13: கரூர் மாநகராட்சி பகுதிகளில் மாம்பழ சீசன் துவங்கியதை முன்னிட்டு பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்கள் முக்கனிகள் என அழைக்கப்படுகிறது. இதில், கரூர் மாவட்டத்தில் வாழை அதிகளவு பயிரிடப்படுகிறது. மற்ற பழ வகைகளான மா, பலா வகைகள் பிற மாவட்டங்களில் இருந்து விளைவிக்கப்பட்டு கொ ண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
அந்த வகையில், மே, ஜூன், ஜூலை ஆகிய மூன்று மாதங்கள் மாம்பழத்திற்கான விற்பனை மாதம் என்பதால், தற்போது, கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், சேலம், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து விளைவிக்க்பபட்ட பல்வேறு வகையான மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. முக்கனிகளில் முதற்கனியாக மாம்பழத்தை அனைத்து தரப்பினர்களும் விரும்பி சாப்பிடுவார்கள் என்பதால் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த பழத்தை அதிகளவு பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
