கரூர், மே 13: செம்பிளிச்சம்பா மற்றும் ஆத்தூர் கிச்சிலி சம்பா நெல் பயிர்களின் பயன் மற்றும் வேளாண்மை தொழில்நுட்பம் குறித்து வேளாண்மைத்துறையினர் தெரிவித்துள்ளதாவது: செம்பிளிச்சம்மாவின் வயது 140 நாட்கள். சிவப்பு அரிசி வகையை சேர்ந்தது. சன்னரக தன்மை கொண்டது. 5 அடி வரை வளரக்கூடியது. ஏக்கருக்கு 32 முதல் 40 மூடை வரை வரும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற ரகம் இவை.
ஆத்தூர் கிச்சிலி சம்பாவின் வயது 35 நாட்கள். வெள்ளை நிறம் வகையை சேர்ந்தது. சன்ன ரகம் தன்மை கொண்டது. 4 முதல் 5.5 அடி வரை வளரக்கூடியது. ஏக்கருக்கு 32 முதல் 45 மூடை வரைவரும். இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்தது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். பாலூட்டும் தாய்மார்களு க்கு பால் சுரக்க உதவும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
