- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இலங்கை கடற்படை
- முதல் அமைச்சர்
- விஜய்
- யூனியன்
- வெளி
- விவகாரங்களில்
- அமைச்சர்
- சென்னை
- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
- எஸ் ஜெய்சங்கர்
- அலெக்ஸ்
- அந்தோனி ராஜன்
- சந்தானா அலோசியஸ்
- அருள் டி பிரிட்டோ
- ஆல்பர்ட்
- சஹாய் செல்வசானு
- மண்டபம்
- ராமநாதபுரம் மாவட்டம்...
சென்னை: முதல்வர் விஜய் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று எழுதியுள்ள கடிதம்:
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியை சார்ந்த அலெக்ஸ், அந்தோணி ராஜன், சந்தான அலோசியஸ், அருள் தே பிரிட்டோ, ஆல்பர்ட் மற்றும் சகாய செல்வசானு ஆகிய 6 மீனவர்கள் 10.5.2026 அன்று நாட்டுப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அவர்களை சர்வதேச எல்லையை கடந்ததாக தெரிவித்து இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
இலங்கை கடற்படையால் ஏற்கனவே 54 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ளனர். மேலும் 264 படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விழைகிறேன். எனவே இப்பிரச்னை குறித்து இலங்கை அதிகாரிகளை தொடர்புகொண்டு உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக மீட்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
