சட்டமன்றத்தில் எதிரொலித்த அதிமுக பிளவு.!! எஸ்.பி.வேலுமணிக்கும் பேச வாய்ப்பளித்த சபாநாயகர்

சென்னை: அதிமுக கட்சியானது எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில், சட்டமன்ற சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை அந்தந்த கட்சியின் சட்டமன்ற குழு தலைவர்கள் வாழ்த்தி பேசினார்கள்.

அதிமுக சார்பாக எடப்பாடி பழனிசாமிக்கு பேச சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வாய்ப்பளித்தார். இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை வாழ்த்தி அவையை நடுநிலையாக நடத்தி செல்ல கேட்டு கொண்டார். எடப்பாடி பழனிசாமி பேசி முடித்து அமர்ந்த பின் பிளவு அதிமுக-விற்கு தலைமை தாங்கும் எஸ்.பி.வேலுமணி தான் பேச வாய்ப்பளிக்குமாறு கையை உயர்த்தினார்.

இதனை கவனித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், எஸ்.பி.வேலுமணிக்கும் பேச வாய்ப்பு வழங்கினார். இதனை தொடர்ந்து எழுந்து பேசிய வேலுமணி, சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்து பேசினார். பிற கட்சிகள் சார்பில் தலா ஒருவர் மட்டுமே பேசிய நிலையில், அதிமுக சார்பில் 2 பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: