நாமக்கல், மே 12: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், நாமக்கல் அடுத்த நாகராஜபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கலெக்டர் துர்கா மூர்த்தியிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: ரெட்டிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நாகராஜபுரத்தில் கடந்த 4 தலைமுறையாக வீடுகட்டி குடியிருந்து வருகிறோம். இங்குள்ள பல வீடுகளில் 3 குடும்பத்தினர் கூட்டு குடும்பம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு 5 ஆண்டுகளுக்கு முன்பு வீடுகட்டி குடியிருந்தால் இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. எனவே, எங்களுக்கு இலவச வீட்டமனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
