சேந்தமங்கலம், மே 9: புதுச்சத்திரம் அடுத்த புதன்சந்தையில், தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பில், தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். வட்டார காங்கிரஸ் தலைவர் இளங்கோ முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் ஷேக் நவீத் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். உடனடியாக தவெகவை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ராமமூர்த்தி, இம்ரான், குப்புசாமி, பொன்முடி, வேல், பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்: நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் டாக்டர் செந்தில் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சுப்பிரமணியம், பாச்சல் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காததை கண்டித்து கோஷமிட்டனர். இதேபோல், திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சதீஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
