சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 232 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்பட 232 பேர் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்றனர். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தவிர சட்டப்பேரவைக்கு தேர்வான அனைவரும் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றனர். காலை 9.30 க்கு தொடங்கிய பதவியேற்பு நிகழ்ச்சி தொடர்ந்து 4 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது
