×

பெரம்பலூர் வல்லப விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி

பெரம்பலூர்,மே 6: பெரம்பலூரில் எடத்தெரு ஸ்ரீ வல்லப விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெரம்பலூர் நகராட்சி, எடத் தெருவில் எழுந்தருளி அருள் பாலித்துவரும் ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் ஸ்ரீ வல்லப விநாயகருக்கு நேற்று சங்கடஹர சதுர்த்தி விழாவை முன்னிட்டு இரவு 8 மணியளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதன்படி ஸ்ரீ வல்லப விநாயகருக்கு பால், தயிர், சந்தனம் பழ வகைகளுடன், சிறப்பு அபிஷேகம் முடித்து மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்வில் காரியக்காரர் பழனியப்பன் சிவசங்கர், சேகர், முன்னாள் அறங் காவலர் வைத்தீஸ்வரன், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர். பூஜைகளை பூசாரிகள் செய்து வைத்தனர்.

 

Tags : Sangadahara Chaturthi ,Perambalur Vallabha ,Vinayagar Temple ,Perambalur ,Sri ,Vallabha Vinayagar ,Edath Street ,Sri Maha Mariamman ,Sri Vallabha Vinayagar ,Perambalur Municipality ,
× RELATED ஸ்கூட்டர் மீது பைக் மோதியதில் அரசு...