×

பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் முற்றோதல் நிகழ்ச்சி

பெரம்பலூர்,மே.4: பெரம்பலூர் ஸ்ரீபிரம்ம புரீஸ்வரர் கோயிலில் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் நகராட்சி, துறையூர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் நேற்று காலை 10 மணிமுதல் மாலை 4மணி வரையிலும் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக அலங்காரம் மண்டபத்தில் மாணிக்க வாசகர் திருவுருவப்படத்தை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாட்டை ஆரம்பித்தனர். இதில் ஏராளமான தின, வார, வழிபாட்டு குழுவினர் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டு தேவாரம், திருவாசகம், பெரியபுராணம். போன்ற பாடல்களை பாராயணம் செய்து ஈசனை மனம் உருகிப் பாடி மகிழ்ந்தனர்.

 

Tags : Brahmapuriswarar temple ,Perambalur ,SHRIBRAHMA PURISWARAR TEMPLE ,Sri Akhilandeshwari Sameda Sri Brahmapurishwarar Temple ,Perambalur Municipality ,Thuraiur Road ,
× RELATED ஸ்கூட்டர் மீது பைக் மோதியதில் அரசு...