கிராம நத்தம் நிலங்களை யாரும் ஆக்கிரமிக்கவோ, உரிமை கோரவோ முடியாது: சென்னை ஐகோர்ட்

சென்னை: கிராம நத்தம் நிலங்களை யாரும் ஆக்கிரமிக்கவோ, உரிமை கோரவோ முடியாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் கிராம நத்தம் நிலங்களை ஆக்கிரமித்த கடைகளுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியது. கடையை அகற்ற அரசு அனுப்பிய நோட்டீசை எதிர்த்து கடை உரிமையாளர் செல்வகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். நோட்டீசை எதிர்த்து மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Related Stories: