நெல்லை: நெல்லை மாவட்டம் ராமையன்பட்டி பகுதியில் உள்ள பழைய இரும்பு குடோன் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களில் பிடித்த தீ வேகமாக பரவி, கரும்புகை மண்டலத்தை உருவாக்கியது. டவுன் மற்றும் பேட்டை பகுதி தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
