×

பராமரிப்பு தொகை தொடர்பான வழக்குகளில் கணவரின் வருமான வரி விவரங்களை ஆர்டிஐ சட்டத்தின்கீழ் கேட்க முடியாது: டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: டெல்லியை சேர்ந்த தம்பதி ஒருவர் குடும்ப பிரச்னை காரணமாக பிரிந்து வாழ்வதால், கணவரிடம் ஜீவனாம்சம் கேட்க மனைவி முடிவு செய்துள்ளார். இதையடுத்து தன் கணவரின் வருமான விவரங்களை தருமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், அந்த பெண் விண்ணப்பித்திருந்தார். அதனை ஏற்று கொண்ட ஒன்றிய தகவல் ஆணையம், கடந்த 2007-2008 நிதியாண்டுக்கான கணவரின் வருமான விவரங்களை தருமாறு வருமான வரித்துைற அதிகாரிகளுக்கு கடந்த 2021ம் ஆண்டு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் கணவர் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி புருஷேந்திர குமார், “பொதுநலன்களுடன் தொடர்பற்ற, தனிப்பட்ட தகவல்களுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 8வது பிரிவின்கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி, ஒரு தனிநபரது வருமான வரி கணக்குகள் அந்த வகையின்கீழ் வருகிறது.

எனவே, 2021ம் ஆண்டு ஒன்றிய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு செல்லாது. அது ரத்து செய்யப்படுகிறது. மனைவி கேட்டுள்ள வருமான தகவல்கள், சந்தேகத்துக்கிடமின்றி மனுதாரரின் தனிப்பட்ட தகவல் அது பொதுநலன் என்ற விதிவிலக்கின்கீழ் வராததால், அவர்(மனைவி) கேட்ட விவரங்களை வழங்குமாறு உத்தரவிட முடியாது” என தீர்ப்பு வழங்கினார்.

Tags : Delhi ,New Delhi ,
× RELATED பரிசோதனை முதல் சிகிச்சை வரை...