×

234 தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை: தமிழக தலைமை ேதர்தல் அதிகாரியும் பங்கேற்பு

 

சென்னை: 234 தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் நேற்று ஆலோசனை நடத்தியது. இதில் தமிழக தலைமை ேதர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கும் பங்பேற்றார். தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் கடந்த மாதம் 23ம் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் 62 மையங்களில் இன்று எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணும் பணியில் மொத்தம் 10,545 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் வாக்கு எண்ணும் செயல்முறையின் வெளிப்படைத் தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்ய 4,624 நுண்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 234 தொகுதிகளுக்குகான தேர்தல் பார்வையாளர்களையும் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் 234 ெதாகுதி பார்வையாளர்களுடன் காணொலி காட்சி வாயிலாக டெல்லியில் இருந்து இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது வாக்கு எண்ணிக்கைக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முடிவுகளை அறிவிப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இந்த ஆலோசனையில் பங்கேற்றார்.

 

Tags : Election Commission of India ,Tamil Nadu ,Chief Electoral Officer ,Chennai ,Archana Patnaik ,
× RELATED தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி...