×

ஒகேனக்கல்லுக்கு 3000 கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் 3 நாட்களாக 1,200 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், அங்கு வறண்டு கிடந்த அருவிகளில் மிதமாக தண்ணீர் கொட்டுகிறது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 716 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 669 கனஅடியாக சரிந்தது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் திறக்கப்படுகிறது. வரத்தை காட்டிலும் நீர்திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 80.10 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 80 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 41.96 டிஎம்சியாக உள்ளது.

Tags : Hogenakkal ,Mettur ,Hogenakkal Cauvery ,
× RELATED மூன்று சட்டமன்ற தொகுதியில் முதல் சுற்று வாக்குகள் விவரம்