- இடம்பவன்
- முத்துபேட்டை
- சுப்பிரமணியன்
- சசிகுமார்
- இடம்பவனம் ஆடைஞ்ஜவலம்
- முத்துப்பெட்டி, திருவாரூர் மாவட்டம்
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் அடைஞ்சவிளாகம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சசிக்குமார்(25) கூலித்தொழிலாளியான இவர் அதே பகுதியில் உள்ள ஒருவரது இடத்தில் நீண்டகாலமாக ஒரு சிரிய குடிசை வீடு அமைத்து குடியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அந்த இடத்தை பரமாரித்து வரும் கண்ணன்(38) என்பவர் சுமார் நான்கு வருடமாக இடத்தை காலி செய்யுமாறு தொடர்ச்சியாக கூறி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு சசிக்குமார் மற்றும் குடும்பத்தினர் வெளியே சென்று இருந்தபோது குடிசை வீடு திடீரென்று தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் ஒன்று கூடி அணைக்க முயற்சி செய்தனர். ஆனாலும் வீடு முழுவதும் எரிந்து சாம்பலாகியது.
இதில் வீட்டில் இருந்த ஆவணங்கள் மற்றும் சுமார் ரூ.25ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி நாசமானது. இதுகுறித்து கூலித்தொழிலாளி சசிக்குமார் எனது வீட்டை கண்ணன் என்பவர் தான் எரித்து இருக்க வேண்டும் என முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சப்.இன்ஸ்பெக்டர் ராகுல் மற்றும் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
