×

கருட சேவை உற்சவத்தில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருவள்ளூர்: திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெருவில் பத்மாவதி தாயார் சமேத, ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கருட சேவை உற்சவம் விமர்சையாக நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த, உற்சவத்தில் சிறப்பு அலங்காலத்தில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் காட்சியளித்தார்.அதாவது, மகாவிஷ்ணு பல்வேறு விதமான வாகனங்களில் அருள் பாலித்தாலும், கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது மிகவும் சிறப்பானதாகும். விஷ்ணு தளங்களில் கருடாழ்வார் பெரிய திருவடி என்று அழைக்கப்படுவார்.

இவர் பெருமானின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்குவார். கருடன் மங்கள வடிவினன், கருட தரிசனம் பாப விமோசனம், நோய் அகலும், குடும்ப நலம், கல்வி மேன்மை அடைதல், கடன் நீங்கி வளம் பெறும் கருட சேவை எம்பெருமானின் அனுகிரகதத்தை பெறுவார்கள் என்பது ஐதீகம் என்பதால், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு `கோவிந்தா…, கோவிந்தா…’ என கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஏ.பிரகாசம், அறங்காவலர்கள் எம்.பாலகிருஷ்ணன், வேதநாயகி ரவி மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags : Sri ,Prasanna ,Venkatesa Perumal ,Thiruvallur ,Padmavati ,Sri Prasanna Venkatesa Perumal Temple ,Sathyamurthi Street ,Chitra Pournami ,Ikoil ,
× RELATED சார்ஜாவில் இருந்து சென்னைக்கு வந்த...