- DMK கூட்டணி
- செல்வப்பெருந்தகை
- கோயம்புத்தூர்
- திமுக
- தமிழ்நாடு காங்கிரஸ் குழு
- ஜனாதிபதி
- கோயம்புத்தூர் விமான நிலையம்
கோவை: திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என செல்வப்பெருந்தகை கூறினார். கோவை விமான நிலையத்தில் நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: நல்லாட்சி தொடர வேண்டும், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெல்ல வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டார்கள். தற்போதைய கருத்துக்கணிப்பில் இந்த கூட்டணி 140, 160 இடங்களில் வெற்றி பெறும் என சொல்கிறார்கள்.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இதைத்தான் நான் கருத்து திணிப்பு என்கிறேன். நிச்சயம் 200 இடங்களுக்கும் மேல் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும். தலைவர் ராகுல் காந்தி, . அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரசாரம் செய்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் எல்லா தொகுதிகளிலும் பிரசாரம் செய்துள்ளார். இந்த உழைப்பு, பணி வீண் போகாது. இவ்வாறு அவர் கூறினார்.
