ஐசிஎஸ்இ, ஐஎஸ்சிஇ தேர்வுகளில் தமிழக மாணவர்கள் 99.9% தேர்ச்சி பெற்று சாதனை

சென்னை: ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சிஇ தேர்வுகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் 99.9 சதவீதம் தேர்வாகி சாதனை படைத்துள்ளனர். இந்த ஆண்டு நடந்த ஐசிஎஸ்இ 10ம் வகுப்புக்கான தேர்வில் 3,434 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 3,428 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் 99.8 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஐஎஸ்சிஇ 12ம் வகுப்பு தேர்வில் மொத்தம் 1501 மாணவிகள் தேர்வு எழுதியதில் 1500 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் 99.9 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. மாணவர்களில் 1804 பேர் தேர்வு எழுதியதில் 1802 பேர் தேர்ச்சி பெற்று 99.9 சதவீதம் தேர்ச்சி என்ற சாதனையை படைத்துள்ளனர். இதுகுறித்து ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியின் ஆசியை சம்யுக்தா கூறும்போது, எங்கள் பள்ளியல் 400 பேர் 12ம் வகுப்பு தேர்வு எழுதியதில் 392 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றார். இதேபோல், ஐசிஎஸ்இ, ஐஎஸ்சிஇ தேர்வுகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் 99.9 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல பள்ளிகளில் ஐசிஎஸ்இ, ஐஎஸ்சிஇ தேர்வுகளில் மாணவர்கள் 100க்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: