×

புதிய உச்சம் ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2.43 லட்சம் கோடி

புதுடெல்லி: ஏப்ரல் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக சுமார் ரூ.2.43 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.2.23 லட்சம் கோடி வசூலானதே எக்காலத்திற்குமான அதிகபட்ச சாதனையாகப் பதிவாகியிருந்தது. உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலமான மொத்த வருவாய் 4.3 சதவீதம் அதிகரித்து ரூ.1.85 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. அதேவேளையில், 2026 ஏப்ரல் மாதத்தில் இறக்குமதி மூலமான ஜிஎஸ்டி வசூல் 25.8 சதவீதம் என்ற மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்து ரூ.57,580 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், ஏப்ரல் மாதத்தில் வரித் திரும்பப் பெறுதல் 19.3 சதவீதம் அதிகரித்து ரூ.31,793 கோடியாகப் பதிவாகியுள்ளது. இவ்வாறு திரும்பப் பெறப்பட்ட வரிகளை ஈடுகட்டிய பிறகு, நிகர ஜிஎஸ்டி வசூல் 7.3 சதவீதம் உயர்ந்து சுமார் ரூ.2.11 லட்சம் கோடியாக உள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Tags : New Delhi ,
× RELATED நிதி நெருக்கடி இருந்தாலும்...