×

ரூ.1,745 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்

புதுடெல்லி: மும்பை துறைமுகம் அருகே போதைப்பொருள் கடத்தி வரப்பட இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், அங்குள்ள ஒரு இடத்தில் கொக்கைன் ரக போதைப்பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனர். 349 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருள்களின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.1,745 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தகவலை வெளியிட்டுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, போதைப்பொருள் பறிமுதல் செய்த அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அமித் ஷா தன் எக்ஸ் பதிவில், “சிறிய அளவிலான போதைப்பொருள் கடத்தலை தொடர்ந்து கண்காணித்து, அதன் மூலம் ஒரு மிகப்பெரிய நெட்வொர்க் கண்டறியப்பட்டுள்ளது. போதைப்பொருள் கும்பலை ஒடுக்குவோம் என தெரிவித் துள்ளார்.

Tags : Union Home Minister ,Amit Shah ,New Delhi ,Narcotics Control Unit ,NCU ,Mumbai ,
× RELATED மேற்கு வங்க மாநிலத்தில் 15...