பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவின் பெய்லி சாலையில் 153 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள உயிரியல் பூங்காவில் 110க்கும் மேற்பட்ட இனங்களை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட விலங்குகள் உள்ளன. இதற்கு முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தியின் பெயர் சூட்டப்பட்டிருந்தது. இதேபோல், சஞ்சய் காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெய்ரி டெக்னாலஜி என்பது பாட்னாவில் உள்ள ஐசிஏஆர் அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகும்.
இது மாநில அரசாங்கத்தால் கடந்த 1980ம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு பால் தொழில்நுட்பத்தில் பிடெக், எம்டெக் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இந்நிலையில் பீகாரில் பாஜ முதல்வராக சாம்ராட் சவுத்ரி பதவி ஏற்ற பிறகு பாட்னா உயிரியல் பூங்கா மற்றும் பால் பண்ணை தொழில்நுட்ப நிறுவனத்துக்கு வைக்கப்பட்டிருந்த சஞ்சய் காந்தியின் பெயரை அகற்ற முடிவுகள் எடுக்கப்பட்டன .
