உத்தரப் பிரதேசம்: ரயில் பயணிகளிடம் தொடர் கைவரிசை காட்டி வந்த உத்தரபிரதேச கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலைய எல்லை பகுதிகளில் ரயில் நிலையங்களில், ரயில்களில் தொடர் செயின் பறிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் முகமது இஸ்ரவேல்(42) காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்ய பட்ட கொள்ளையனிடம் இருந்து ரூ. 3.30 லட்சம் ரொக்கம், 2 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
