வேலூர், ஏப்.20: வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்கு எண்ணும் மையத்தில் இயந்திரங்கள் ஒப்படைப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினர். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, வேலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்று, வாக்கு எண்ணும் மையத்தில் கொண்டு வரப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களை பெறும் வரவேற்பு மையத்தில் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
