சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

மதுரை, ஏப்.29: மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சித்திரை திருவிழாவால் மதுரை மாநகரமே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மே ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது.

இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் 7,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த நிலையில், வைகை ஆற்றில் அழகர் இறங்கும் இடத்தில் தடுப்புகள் அமைக்கப்ப்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதே போன்று, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

 

Related Stories: