ஒரத்தநாடு, ஏப்.29: தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு அரசு கால்நடை மருத்துவமனை அருகே உள்ள மரத்தில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாப்பாநாடு அருகே உள்ள சோழன் குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையன் மகன் சூரியமூர்த்தி (53). இவர் தஞ்சையில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்து விவசாய தொழில் செய்து வந்தார்.
சம்பவத்தன்று ஊருக்கு வந்த சூரியமூர்த்தி பாப்பாநாடு சுடுகாடு அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூரியமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பாப்பாநாடு இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.
