நீங்களே என் குடும்பம்…பாஜக-வின் பதவியேற்பு விழாவில் நான் நிச்சயமாக பங்கேற்பேன் – மே.வங்கத்தில் மோடி பேச்சு

கொல்கத்தா: வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி மேற்குவங்கத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட தேர்தலுக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி பாரக்பூரில் நடைபெற்ற பேரணி ஒன்றில் உரையாற்றினார். நடைபெற்றுவரும் இந்த தேர்தலுக்காக, மேற்குவங்க மாநிலத்தில் அவர் பங்கேற்ற கடைசி பொதுப் பிரச்சார நிகழ்வு இதுவாகும். இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, எல்லை தாண்டி மாநிலத்திற்குள் வரும் ஊடுருவல்காரர்கள் குறித்து எச்சரிக்கை விடுத்த அவர், அவர்கள் “கண்டறியப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள்” என்று கூறினார்.

கூட்டத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை குறிப்பிட்டுப் பேசிய பிரதமர், மேற்குவங்கத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி வாய்ப்புகள் குறித்து இந்த கூட்டத்தை பார்த்து மிகுந்த நம்பிக்கை கொள்வதாக தெரிவித்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் இதுவே எனது கடைசி பொதுக்கூட்டமாகும். மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, பாஜகவின் பதவியேற்பு விழாவில் நான் நிச்சயமாகக் கலந்துகொள்வேன் என்ற நம்பிக்கையுடன் நான் இங்கிருந்து திரும்புகிறேன் என்று குறிப்பிட்டார்.

எனக்குள் உருவாக்கி இருக்கும் இந்த நம்பிக்கை எனது உற்சாகத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. நான் ஹெலிபேடிலிருந்து இங்கு வந்து கொண்டிருந்தேன். சுமார் 2 கி.மீ தூரம் கொண்ட பாதையின் இருபுறமும் பிரம்மாண்டமான மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் என்னை வாழ்த்த திரண்டு வந்திருப்பதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. நான் என் வீட்டை விட்டுப் புறப்பட்டதிலிருந்து, உங்கள் அனைவரின் மத்தியிலும் இருப்பதில் தான் நான் மகிழ்ச்சி மற்றும் அமைதியை கண்டேன், எனவே நீங்களே என் குடும்பம் என்று கூறினார். நான் பாஜக-வில் இணைந்த பிறகு, ஒரு கட்சித் தொண்டனாக, கட்சி என்னிடம் எதை எதிர்பார்த்ததோ, அதையெல்லாம் நான் செய்திருக்கிறேன். தேர்தல் தொடர்பான பொறுப்புகளை ஏற்று கொண்டதும், இந்தப் பயணத்தின் ஒரு அங்கமாக இருக்கிறது என்று பிரதமர் மோடி பேசினார்.

Related Stories: