தேவையானவை:
பச்சரிசி
புழுங்கலரிசி
பாசிப்பருப்பு – தலா 1 கப்
ஜவ்வரிசி, ரவை – தலா 1/2 கப்
பொடித்த வெல்லம் – 2 கப்
ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி, பருப்பு மூன்றையும் ஒன்றாகவும், ரவை, ஜவ்வரிசியை தனித்தனியாகவும் ஊற விடவும். ஒரு மணி நேரம் ஊறியதும் முதலில் அரிசிகள், பருப்பை அரைக்கவும். பாதி அரைத்தவுடன் ரவை, ஜவ்வரிசி, நீரில் கரைத்து வடிகட்டிய வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மாவை வட்டமாக ஊற்றி, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு, மறுபுறம் வேக விடவும். ஒவ்வொன்றாகப் போட்டு, மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வேக விட்டு எடுக்கவும்.
– எஸ்.மேரி ரஞ்சிதம், சிவகங்கை.
