சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் அப்துல் ரஹீம் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: ‘ஜனநாயகன்’ திரைப்பட முன்னோட்டம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த முன்னோட்ட காட்சியில் வெடிகுண்டு செய்து ஊர் திருவிழாவில் பொதுமக்கள் கூடும் இடத்தில் முஸ்லிம் குண்டு வைப்பது போல் காட்சி வருகிறது. தேர்தல் நேரத்தில் முஸ்லிம் வெறுப்பு பிரசாரம் செய்து தேர்தலை நிறுத்தவோ அல்லது வன்முறை நடத்தவோ ஜோசப் விஜய்யும், இப்படத்தினை இயக்கிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் முயற்சி செய்வதாக தோன்றுகிறது. ஆகவே நடிகர் ஜோசப் விஜய் மற்றும் இயக்குநர் எச்.வினோத், கே.வி.என் புரொடக்ஷன் உரிமையாளர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
