வேலூர், ஏப்.11: ஆதார் கார்டு, பான்கார்டு பயன்படுத்தி ரூ.3 கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று ஒருவர் புகார் அளித்தார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ஒருவர் நேற்று எஸ்பி அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது ஆதார் மற்றும் பான்கார்டை பயன்படுத்தி மர்மநபர்கள் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் ஜிஎஸ்டி பதிவெண் உருவாக்கியுள்ளனர். பின்னர் அதே ஆண்டு ஜூன் மாதம் வர்த்தகத்தை முடித்து வைத்துள்ளதாக ஆவணங்களில் தெரியவருகிறது. எனது ஆதார் மற்றும் பான் பதிவெண்ணை பயன்படுத்தி, நான் ஏதும் ஜிஎஸ்டி பதிவெண் உருவாக்கவில்லை. எனது ஆவணங்களை பயன்படுத்தி ரூ.3 கோடி வரை ஜிஎஸ்டி மோசடி செய்துள்ளனர். எனவே எனது ஆவணங்களை தவறாக பயன்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை ெபற்று விசாரித்த போலீசார், இதன் மீது நடவடிக்கை எடுக்க குடியாத்தம் போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
