மோடி, அமித்ஷா வாகனத்தை சோதனை செய்யாதது ஏன்?: வைகோ கேள்வி

கடையநல்லூர் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் தி.மு.ராசேந்திரனை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ பேசியதாவது: தமிழ்நாட்டின் வாழ்வாதாராம், ஜீவாதார உரிமையை பாதுகாக்க மதிமுகவை போல் போராடியது யாரும் கிடையாது. சமய நல்லிணக்கத்துடன் உள்ள தமிழ்நாட்டில் மோதல்களை ஏற்படுத்த சிலர் முயன்று வருகின்றனர். அது தமிழ்நாட்டில் நடக்காது. தேர்தல் பிரசாரத்திற்காக செல்லும் முதல்வரின் வாகனத்தை எந்த அடிப்படையில் பலமுறை சோதனை செய்தீர்கள்?. பிரதமர் மோடியின் வாகனத்தை சோதனையிடுவதற்கு தயாரா?. அமித்ஷாவின் வாகனத்தை சோதனையிடுவீர்களா?. அனைவருக்கும் ஒரேவிதமான அணுகுமுறை இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: