செந்தில் பாலாஜி கிட்ட கெத்தா தோற்பேன்: அதிமுக வேட்பாளர் சரண்டர்

கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் தொகுதி பிரசாரத்திலும், கட்சி நிர்வாகிகளிடம் பேசும் போது விரக்தியா இருக்கிறாராரு. ஒரு கூட்டத்தில் பேசறப்ப, நான் செந்தில் பாலாஜி கிட்ட தோத்தாலும் கெத்தா, வீரமா தான் தோத்து போவேன் என்று ஆவேசப்பட்டாராம். அப்புறம், நான் தோக்க மாட்டேன், ஜெயிக்க தான் போறேன், நீங்க எல்லாம் அத பாக்க போறீங்க என்றாராம். கரூர்ல செந்தில் பாலாஜி நிக்க வேண்டியது தானே, அவர் ஏன் கோவைக்கு வர்றாரு… என டயலாக் பேசினாராம். அதற்கு செந்தில் பாலாஜி, நீங்க எந்த ஊரு, மதுரை தானே, இங்க எப்ப வந்தீங்க, ஏன் வந்தீங்க என கேட்டுட்டாராம். இதனால் வேறு என்ன பேசலாம்னு அம்மன் அர்ஜூனன் யோசிக்கிறாராம். அதிமுக மேலிடம், பயத்துல முன்ன பின்ன மாத்தி பேசி காமெடி பண்ணாதீங்க, நீங்க பயப்படறது வெளியே தெரிய கூடாது, எப்பவும் போல தொகுதி ஜனங்க கிட்ட சிரிச்சு பேசுங்க என சொல்லி அனுப்பி வெச்சிருக்காம்…பிரசார பயத்துல அண்ணன் இன்னும் என்னென்ன புலம்ப போறாரோ என அதிமுககாரர்கள் சங்கடப்படுகறாங்களாம்.

Related Stories: