×

சுங்கச்சாவடிகளில் புதிய டிஜிட்டல் விதிமுறைகள் மற்றும் கட்டண மாற்றங்கள்!

டெல்லி: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடிகளில் நிலவும் நெரிசலைக் குறைக்கவும், பணப் பரிவர்த்தனையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வருகிறது.

இதன்படி, இனி சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பணம் மூலமாகப் பணம் செலுத்த முடியாது; அதற்குப் பதிலாக FASTag அல்லது UPI போன்ற டிஜிட்டல் முறைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். ஒருவேளை வாகனத்தில் FASTag வசதி இல்லையென்றால், பயணிகள் UPI மூலம் பணம் செலுத்தலாம், ஆனால் அதற்கு அபராதத் தொகையாகச் சாதாரணக் கட்டணத்தை விட 1.25 மடங்கு கூடுதல் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும்.

மேலும், சுங்கச்சாவடிகளில் அடையாள அட்டைகளைக் காட்டி இலவசமாகச் செல்லும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இனி அரசு வாகனங்கள் உட்பட கட்டண விலக்கு கோரும் அனைத்து வாகனங்களும் கட்டாயமாக ‘விலக்கு அளிக்கப்பட்ட FASTag’ (Exempted FASTag) அல்லது முறையான பாஸ்களை வைத்திருக்க வேண்டும். இது அரசு அடையாள அட்டைகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க உதவும்.

இதற்கிடையில், அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கான வருடாந்திர பாஸ் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1, 2026 முதல் இதன் விலை 3,000 ரூபாயிலிருந்து 3,075 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பாஸ் மூலம் ஓராண்டிற்கு சுமார் 200 பயணங்களை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Delhi ,National Highways Commission ,
× RELATED எடப்பாடி ஆட்சியில் நடந்த...