×

அஇபுதமமுக வேட்பாளரிடம் இருந்து ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட பணம் பறிமுதல்

மயிலாடுதுறை மாவட்டம் சேத்திரபாலபுரம் பஸ் நிறுத்தம் அருகே வேளாண்மை அலுவலர் லாரன்ஸ் தலைமையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பழனிவேல் உள்ளிட்ட தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழக சீர்காழி தொகுதி வேட்பாளர் மாலதி என்பவர் கட்சி செலவுக்காக உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது.  உரிய ஆவணம் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

Tags : AIPM ,Officer ,Lawrence ,Special Sub Inspector ,Palanivel ,Chethirapalapuram ,Mayiladuthurai district ,All India ,Makkal Munnetra ,Kazhagam Sirkazhi ,
× RELATED அய்யப்பன்தாங்கலில் பரபரப்பு; டி.வி...